Friday 2 December 2011

கனி விடுதலை கருணாநிதி கவிதை!

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே கனிமொழிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடந்தேனே கனிவிழிக்கு..
கண்ணுறங்கல.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே என் கனிமொழிக்கு..

karuna_new_11வீட்டுல பாக்கல… அறிவாலயத்துல பாக்கல..
ஆதித்யாவை கொஞ்சறது பாக்கல…
அவ காப்பி குடிக்கற அழக பாக்கல..
பாத்தது எல்லாம் டெல்லியில…
அதுவும் தொலவுல…
தள்ளுவண்டியில ஏற முடியல…
இறங்க முடியல…
சி.ஐ.டி. காலனியில நிக்கல…
கோபாலபுரத்துல நிக்கல…
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவ உருவம் என் மனசுல..

நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..
மாசமா.. ஆறு மாசமா..
காதுக்கிடன்தேனே கனிமொழிக்கு..
திகார்ல் போனும் இல்லை நம்பரும் இல்ல.
அதனால போனும் பன்னல….
கோர்ட்டுல ஜாமீன் கொடுக்கல..
ஆனாலும் நானும் விடல…
பாலோ பண்ணது தப்பும் இல்ல..

எப்படி வந்தா நேரில..

Karunanidhi_meets_Kanimozhiஎன்னை கடிச்சு துப்பல...
சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல..
சிரிச்சு பேசல…
காதுல கம்மல் இல்ல..
மூக்குல மூக்குத்தி இல்ல..
எப்படி இருந்தா என் வீட்டுல…
நான் ஏங்கித் தவிச்சேன்… என் கனிமொழிக்கு !
மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா..
நான் வாழ்ந்தேன்…

கண்ணுறங்கல.. செவி மடுக்கல..
பசி எடுக்கல… வாய் சிரிக்கல…
இனிமே…
மாசமா… ஆறு மாசமா?

-நன்றி(எங்கேயும் எப்போதும் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு)
-நன்றி தமிழ் லீடர் Tamileadar.in

No comments:

Post a Comment